தஞ்சை, டிச.5: தஞ்சை ரெட்டிபாளையம் அருகே வேதவள்ளி நகரில் மண் சாலை மழையில் சேறும் சகதியுமாக மாறியதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.தஞ்சை ரெட்டிப்பாளையம் சாலையில் உள்ள வேதவள்ளி நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தார்சாலை வசதியின்றி மக்கள் பல ஆண்டுகளாக சிரமத்தை அடைந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் பலத்த மழையால் இங்குள்ள மண் சாலை சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இதில் எங்கு பள்ளம் உள்ளது என்பதை கண்டுபிடித்து பைக்கில் செல்வோரும், நடந்து செல்வோரும் பயன்படுத்த வேண்டிய அவலநிலையில் உள்ளனர். பல இடங்களில் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியாகி பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இப்பகுதிவாசிகள் பீதி அடைந்துள்ளனர்.