நாகை, டிச.5: நாகை அக்கரைப்பேட்டை மீனவ மகளிர் கூட்டுறவு சங்க தேர்தலில் வாக்குகள் சேகரிப்பதில் திமுக, அதிமுகவினர் இடையே கடும் போட்டி ஏற்பட்டதால் அசம்பாவிதங்களை தடுக்க போலீஸ் குவிக்கப்பட்டது.நாகை அக்கரைப்பேட்டை மீனவ மகளிருக்கான கூட்டுறவு சங்க தேர்தல் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று அக்கரைபேட்டையில் வாக்குப்பதிவு நடந்தது. அக்கரைப்பேட்டை மீனவர் மகளிர் கூட்டுறவு சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்கள் 7 பேர் தேர்வு செய்யப்பட வேண்டும். திமுக சார்பில் 7 பேரும், அதிமுக சார்பில் 7 பேரும்இ சுயேட்சை ஒருவரும் என மொத்தம் 15 பெண்கள் போட்டியிடுகின்றனர். நடேசராஜா தேர்தல் நடத்தும் அலுவலராக பணியாற்றினார். வாக்குப்பதிவு நேற்று காலை தொடங்கியது. இதில் முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் சுயேட்சையை சேர்ந்த பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 3,445 மகளிர் வாக்குகள் அளித்து 7 உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும்.
வாய்க்கால் தூர்வாராததால் தண்ணீர் வடிவதி்ல் சிக்கல் சீர்காழி அருகே செங்கரும்பு வயல்களை மழைநீர் சூழ்ந்தது அக்கரைப்பேட்டை மீனவ மகளிர் கூட்டுறவு சங்க தேர்தல் வாக்குசேகரிப்பதில் திமுக, அதிமுக கடும் போட்டி
- கரும்பு வயல்கள்
- மாவட்டம்
- தேர்தல்
- Chikkarepattu
- அக்கரைப்பட்டு மீன்வள மகளிர் கூட்டுறவு சங்கம்
- திமுக
- அஇஅதிமுக