கருர், டிச. 5: கோபித்துக் கொண்டு தனியாக வசித்து வந்த மனைவியிடம் தகராறு செய்த கணவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.கரூர் மாவட்டம் ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம்(45). இவரது மனைவி கோகிலா(41). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கோகிலா கணவருடன் கோபித்துக் கொண்டு தனியாக பிள்ளைகளுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் கோகிலாவிடம் சென்ற முருகானந்தம், தகராறு செய்ததாக கூறப்படுகிறது.இது குறித்து கோகிலா அளித்த புகாரின் பேரில், வாங்கல் போலீசார் முருகானந்தத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.