கரூர், டிச. 5: கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் டிசம்பர் 14ம்தேதி அன்று லோக் அதாலத் நடைபெறவுள்ளதாக மாவட்ட நீதிபதி நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.லோக் அதாலத் நடைபெறுவது குறித்து மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் நிருபர்களிடம் தெரிவித்துள்ளதாவது:டிசம்பர் 14ம்தேதி அன்று மெகா லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவின்படி நடைபெறவுள்ளது.இரண்டு மாதங்களுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகள், வழக்குகளாக மாற வாய்ப்புள்ள பிரச்னைகள் ஆகியவற்றுக்கு இதில் தீர்வு காணப்படும். கரூர் மற்றும் குளித்தலை நீதிமன்றங்களில் 6 அமர்வுகள் அமைக்கப்பட்டு ஆயிரம் வழக்குகள் உட்பட 4500 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. தமிழகத்தில் உள்ள சிறிய மாவட்டங்களில் அதிக வழக்குகள் முடித்த மாவட்டங்களில் கரூர் மாவட்டமும் ஒன்றாக உள்ளது.