கரூர், டிச. 5: வடிகாலில் பிளாஸ்டிக்கழிவுகள் கலப்பதால் சுகாதார கேடு ஏற்படுகிறது.கரூர் இனாம்கரூர் பகுதியில் பெரியகுளத்துப்பாளையம் உள்ளது. இங்கு கழிவுநீர் செல்வதற்காக வடிகால் அமைக்கப்பட்டது. மழைக்காலத்தில் மழைநீர் கலந்து வடிகாலில் நிரம்பி விடுகிறது. கழிவுநீர் செல்ல முடியாத அளவுக்கு குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் கொட்டப்பட்டுள்ளன.