செங்கம், டிச.5: செங்கம் அடுத்த மேல்புழுதியூர், பக்ரிபாளையம் கிராம பொது மக்கள் குடிநீர் மற்றும் சாலை வசதி செய்து தரக்கோரி நேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியத்தில் உள்ளது மேல்புழுதியூர் மற்றும் பக்ரிபாளையம் கிராம ஊராட்சிகள். இந்த பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் கழிவு நீர் கால்வாய் இல்லாமல் கழிவுநீர் சாலையிலேயே ஓடுகிறது. மேலும், குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் சேறும், சகதியுமாக உள்ளது. அதேபோல் குடிநீர் சப்ளை முறையாக செய்வதில்லை. இரவு நேரங்களில் தெருவிளக்கு எரிவது இல்லை என பல்வேறு கோரிக்கைகளை வலியூறுத்தி பெண்கள் உட்பட ஏராளமானோர் நேற்று பெங்களூரு- புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.