திருச்செங்கோடு அரசு மகளிர் பள்ளியில் புகார் பெட்டி

திருச்செங்கோடு, டிச. 4: திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில், திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகளுக்கு  புகார் பெட்டி வைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து  வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை புகாராக தெரிவிக்க திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில், முதல் கட்ட முயற்சியாக புகார் பெட்டி வைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டஎஸ்பி  அருளரசு உத்தரவின் பேரில் திருச்செங்கோடு டிஎஸ்பி சண்முகம் தலைமையில், அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ஜென்சி, திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு புகார் பெட்டி வழங்கினார். தலைமை ஆசிரியை தேன்மொழி பெற்றுக்கொண்டார். இந்த புகார் பெட்டியில் போடப்படும் புகார்களை போலீசார் சேகரித்து அவற்றை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பார்கள். பெயர் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: