கடத்தூர் பகுதியில் ரோஜா சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்

கடத்தூர், டிச.4: கடத்தூர் பகுதியில் ரோஜா சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கடத்தூர் அருகே நல்லகுட்டல அள்ளி, அஸ்தகிரியூர், நடூர் உளிட்ட பகுதியில், சொட்டு நீர் பாசனத்தின் மூலம் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் ரோஜா சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, பருமழை பெய்து வருவதால் ரோஜா செடிகள் செழித்து வளர்ந்து பூத்து குலுங்குகிறது. இந்த பூக்களை பறித்து தர்மபுரி மற்றும் ஓசூர், சேலம், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். தற்போது மழையின் காரணமாக, பூக்கள் கிலோ ₹50 முதல் ₹80க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: