பைக் மோதி காவலாளி படுகாயம்

களக்காடு, டிச. 4: களக்காடு அருகே உள்ள மேலமாவடியை சேர்ந்தவர் தங்கசாமி (55). இவர், டோனாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காவலாளியாக உள்ளார். சம்பவத்தன்று மாலை பணி முடிந்து சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். மாவடி புதூர் ரோட்டில் வந்த போது, பின்னால் டோனாவூரை சேர்ந்த கருப்பசாமி ஓட்டி வந்த பைக், தங்கசாமி மீது மோதியது.  இதில் அவர் படுகாயமடைந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக களக்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து அவரது மனைவி இசக்கித்தாய் (49) திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார்.

   போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: