2 குழந்தைகளுடன் தாய் திடீர் மாயம்

தேனி, டிச.4: ஆண்டிபட்டி அருகே சிக்கையகவுண்டன்பட்டியில் தாய் வீட்டிற்கு வந்து விட்டு திருப்பூர் சென்ற தாய் மற்றும் 2 குழந்தைகள் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆண்டிபட்டி அருகே சிக்கையகவுண்டன்பட்டியில் குடியிருப்பவர் ஆண்டியப்பகவுண்டர் மனைவி பவுன்(55). இவரது மகள் அனிதா(28). இவருக்கும் அரவிந்தன் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு யாகவ்(8), யாழினி(4) குழந்தைகள் உள்ளனர். அனிதா குடும்பத்துடன் கடந்த 2 ஆண்டுகளாக திருப்பூரில் வசித்து வந்தார். கடந்த 1ம்தேதி சிக்கையகவுண்டன்பட்டிக்கு அனிதா தனது இரு குழந்தைகளுடன் வந்து தங்கிவிட்டு 2ம்தேதி திருப்பூருக்கு குழந்தைகளுடன் சென்றார். ஆனால் அனிதா திருப்பூர் சென்றடையவில்லை என தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அனிதாவையும் அவரது இரு குழந்தைகளையும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, பவுன் ஆண்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில்  போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன தாய் மற்றும் இருகுழந்தைகளை தேடி வருகின்றனர்.

Related Stories: