மானாமதுரை, டிச.4: மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தவர்களுக்கு நிவாரணம் கோரி போராடிய நாகை திருவள்ளுவனை கைது செய்த காவல்துறை நடவடிக்கையை கண்டித்து மானாமதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.மானாமதுரை புதுபஸ்ஸ்டாண்டு அருகே உள்ள வழிவிடுமுருகன் கோயில் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில்., மேட்டுபாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தியும், இறந்தவர்கள் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கவும், சுற்றுச்சுவர் கட்டிய உரிமையாளர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோசங்கள் எழுப்பபட்டது. விசிக நிர்வாகி விடுதலை மாணிக்கம், தமிழ்தாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.