சிவகங்கை, டிச. 4: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் தடையில்லா சான்றிதழ் (என்ஓசி) பெற விண்ணப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் டிச.27, 30 தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கவுள்ளது. ஊரக பகுதிகளில் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தடையில்லா சான்று பெறுவதற்கு தங்களது எல்லைக்குட்பட்ட காவல்நிலையங்களில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி அந்தந்த பகுதிகளில் உள்ள வேட்பாளர்கள் ஆன்லைன் மூலம் e.services.tnpolice.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்வதன் அடிப்படையில் அந்தந்த காவல்நிலையங்களுக்கு காவல்துறை கட்டுப்பாட்டு பிரிவிலிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் பிரித்து அனுப்பி வைக்கப்படும். அதன்பின் அந்தந்த காவல்நிலையங்களில் வேட்பாளர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தடையில்லா சான்று வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது