கரூர் பகுதியில் தொடர் மழை ராயனூர் என்எஸ்கே நகரில் குளம் போல் தண்ணீர் தேக்கம்

கரூர், டிச. 4: தொடர் மழை காரணமாக ராயனூர் என்எஸ்கே நகரில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.கரூர் மாவட்டம் முழுவதும் நான்கு நாட்களாக காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் எதிரொலி காரணமாக, நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளது.இதில், ஒரு பகுதியாக ராயனூர் என்எஸ்கே நகர்ப்பகுதி சாலையில் மழைநீர் குளம் போல பல இடங்களில் தேங்கியுள்ளது. இதன் காரணமாக இந்த பகுதியினர் வீடுகளுக்கு செல முடியாமலும், வாகனங்களில் செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.மழைநீர் தேங்கியுள்ளது குறித்து இந்த பகுதியினர்களும் புகார் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்றி சரி செய்ய தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Related Stories: