உடுமலை, டிச. 4: உடுமலையில் இருந்து தளி கிராமத்துக்குள் செல்லாமல், பைபாஸ் ரோட்டில் செல்லும் வகையில் புறவழிச்சாலை உள்ளது. மொடக்குபட்டி, தேவனூர்புதூர் வழியாக செல்லும் இச்சாலையை சுற்றுலா வாகனங்கள் மட்டுமின்றி பொதுமக்களும் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக, இந்த சாலை தற்போது குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இந்த சாலையில் பேட்ச் ஒர்க் செய்து முழுமையாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.