பந்தலூர், டிச. 4: பந்தலூர் அருகே சேரம்பாடி சுற்று வட்டாரம் பகுதிகளில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தனியார் தேயிலைத்தோட்டங்கள் மற்றும் சிறுகுறு விவசாயிகள் அன்றாடம் கூலிகள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் அரசு ஆரம்ப சுகாதாரம் நிலையம் அமைக்கவேண்டும் எனஅரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், கடந்த வருடம் சேரம்பாடியில் கிராம சுகாதார செவிளியர் கட்டிடத்தில் போதிய இடவசதிகள் இல்லாமல் அரசு ஆரம்ப சுகாதாரம் நிலையம் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது புதிய ஆரம்ப சுகாதாரம் நிலையம் கட்டுவதற்கு அப்பகுதியில் உள்ள தனியார் தேயிலைத்தோட்டம் நிலம் வழங்கியது.