கூடலூர், டிச. 4: நீலகிரி மாவட்ட தமிழ் சங்கம் சார்பில் 19ம் ஆண்டு பொங்கல் விழாவை ஒட்டி பள்ளி மாணவ மாணவியர் இடையே கலை இலக்கிய போட்டி கலைவாணி மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடந்தது. 1 முதல் 12ம் வகுப்பு வரை ஓவியம், பாட்டு, கட்டுரை, பேச்சு, நடிப்பு, நடனம், பொது அறிவு உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சிக்கு, நீலகிரி மாவட்ட தமிழ் சங்க தலைவர் மணிவண்னன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆனந்தராஜா வரவேற்றார். கூடலூர் ஆர்டிஓ ராஜ்குமார் போட்டிகளை துவக்கி வைத்தார்.