ஆனந்தமலை முருகன் கோயிலில் 10ம் தேதி கிருத்திகை விழா

ஊட்டி, டிச. 4: ஊட்டி அருகே கீழ் அப்புகோடு பகுதியில் ஆனந்தமலை முருகன் கோயில் உள்ளது. இக்கோயில் மாதந்தோறும் கிருத்திகை விழா மற்றும் பண்டிகை நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதன் ஒருபகுதியாக வரும் 10ம் தேதியன்று ஆனந்தமலை முருகன் கோயிலில் கிருத்திகை விழா நடக்கிறது. அன்று காலை 10 மணிக்கு சித்தி விநாயகருக்கு அலங்கார பூஜையும், ஆனந்தமலை முருகனுக்கு அபிேஷக பூஜையும், ஏழு ஹெத்தையம்மன், நவ கிரகங்களுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது.

விழாவை முன்னிட்டு காலை 10 மணி முதல் 12 மணி வரை கல்லக்கொரை மனோ குழுவினாின் சிறப்பு பஜனை இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. 12 மணியில் இருந்து 1 மணி வரை ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி, பக்தி கானங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து கலாசார நடன நிகழ்ச்சி, அன்னதான நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் ராமசந்திரன் செய்து வருகிறார்.

Related Stories: