பாலக்காடு, டிச. 4: கேரள மாகில அளவில் அரசு, மற்றும் தனியார் பள்ளிக்கூட மாணவ, மாணவியர் களின் கலைவிழா கஞ்ஞங்காட்டில் நடந்தது. இந்த கலைவிழாவில் பாலக்காடு மாவட்ட பள்ளி மாணவர்கள் 951 புள்ளிகள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்தனர். மாநில கல்வி நிர்வாகத்தின் தங்கக் கோப்பையை மாணவர்கள் கைப்பற்றி பாலக்காடு மாவட்டத்திற்கு பெருமைத் தேடித் தந்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வரவேற்பு பாலக்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. முன்னதாக, வெற்றிப் பெற்ற மாணவர்கள், ஆசிரியர்கள் ஆரவாரத்துடன் தங்கக் கோப்பையை எடுத்து பாலக்காடு நகர வீதியில் ஊர்வலம் வந்தனர். வரவேற்பு விழாவை பாலக்காடு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சாந்தகுமாரி தொடங்கி வைத்தார். நகராட்சி தலைவர் பிரமீளா சசிதரன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பாலமுரளி வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.