ஊராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஆலோசனை கூட்டம்

ஊட்டி, டிச. 4: கிராம ஊராட்சிகளுக்கான தேர்தல் இம்மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடக்கும் நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்றுளு நடந்தது. மாவட்ட கலெக்டர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரான இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார். கூட்டத்தில், தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய கலெக்டர், தொடர்ந்து தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சியையும் துவக்கி வைத்தார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா தேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: