கோவை, டிச.4: இந்தியாவில் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி தாக்கல் செய்வதில் புதிய நடைமுறை அமலாக்கப்படவுள்ளது. ஜிஎஸ்டி வரி செலுத்துவதற்கான வழிமுறை gst.gov.in என்ற அரசு இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துவோர் இதில் பரிட்சார்ந்த அடிப்படையில் ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்யலாம். வரும் 7ம் தேதி கோவை ரேஸ்கோர்ஸ் ரோடு ஏடிடீ வீதியில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது.