மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா

ஈரோடு, டிச. 4: ஈரோடு கருங்கல்பாளையம்  சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன்  கோயில்களில் குண்டம் திருவிழா கடந்த 1ம் தேதி நடந்தது. இதையடுத்து பொங்கல் விழா நேற்று காலை நடந்தது. விழாவில் திரளான பெண்கள் கலந்துகொண்டு கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதேபோல் கருங்கல்பாளையம் ஜெயகோபால் வீதியில் உள்ள தேவி கருமாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா நடந்தது. அதன்பின்னர் மாலையில் திருவிளக்கு பூஜை நடந்தது. இன்று (4ம் தேதி) இரவு 8 மணிக்கு கும்பம் காவிரி ஆற்றில் விடும் நிகழ்ச்சியும், நாளை (5ம் தேதி) மாலை 6 மணிக்கு அம்மன் வீதி உலாவும் நடக்கிறது.

Related Stories: