தங்கபாலு பேட்டி மிரட்டி அபராதம் விதிப்பதை தவிர்த்து

புதுக்கோட்டை, டிச.4: கீரனூர் பகுதியில் தொடர்ந்து ஏற்படும் விபத்துகளை தடுக்க போலீசார் மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து துறைகள் இணைந்து விழிப்புணர்வு மற்றும் தடுப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோடடை மாவட்டம் கீரனூரை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பல்வேறு இடங்களில் சாலைகளில் விபத்துகள் நடந்து உயிரிழப்புகள் ஏற்பட்டது. குறிப்பாக கீரனூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட திருச்சி புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் பல இடங்களில் விபத்துகள் ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் விபத்துள் நடைபெற்று வருகிறது. மேலும் சில இடங்களில் விபத்து ஏற்பட்டு பலர் இறந்து விடுகின்றனர். சில இடங்களில் நடக்கும் விபத்துகளில் காயமடைந்து புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த விபத்துகள் அனைத்தும் வாகன ஓட்டிகள் அஜாக்கரதையாக ஏற்பட்ட விபத்துகள் என்று அந்தந்த விபத்துகள் நடந்த இடத்திற்கு விசாரணைக்கு சென்ற போலீசார் தெரிவித்தனர்.

விபத்தில் இறந்தவர்கள் ஹெல்மெட் அணிந்திருந்தால் கட்டாயமாக காயத்துடன் உயிரிழப்பு இல்லாமல் தப்பித்து இருக்கலாம். நான்கு சக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கும்போது சீட் பெல்ட் அணிந்திருந்தால் கட்டாயம் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது என்று போலீசார் தெரிவிக்கின்றனர். இதனால் போலீசார் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார் வாகன ஓட்டிகளை மிரட்டி அபராதம் விதிக்கின்றனர். அத்துடன் அவர்களுக்கு ஹெல்மெட், சீட்பெல்டின் முக்கியத்துவத்தை எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுபோல் போலீசார் வழக்கு பதிவு செய்து வாகன ஓட்டிகளின் லைசென்சை பெற்று அந்தந்த மோட்டார் வாகன போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கின்றனர். அங்கு வாகனஓட்டிகள் சென்று சில நடைமுறைகளை செய்துவிட்டு லைசென்சை பெற்று செல்கின்றனர்.

அங்கேயும் அதிகாரிகள் வாகன ஓட்டிகளிடம் நடைமுறைகைளை முடித்துகொண்டு எந்தவித விழிப்புணர்வும் செய்யாமல் அப்படியே அனுப்பி வைக்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட், சீட்பெல்ட் முக்கியத்துவம் மற்றும் மோட்டார் வாகன சட்ட விதிகள் உள்ளிட்டவைகள் தெரியவில்லை. இதனால் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க போலீசார் மற்றும் மோட்டார் வாகன துறை இணைந்து விழிப்புணர்வு கூட்டங்கள், நிகழ்ச்சிகளை நடத்தி விபத்துகளை குறைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: