தினம் ஒரு திருக்குறள் வாசகம் இடம்பெறும் காவல் நிலையம்

கந்தர்வகோட்டை, டிச.4: கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் தற்போது தினந்தோறும் ஒரு திருக்குறள் எழுதப்பட்டு அதற்கு விளக்கமும் எழுதப்பட்டு வருகிறது. கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் தற்போது புதிய வாடிக்கையாக ஒரு வௌ்ளை பலகை வைக்கப்பட்டு காவல் நிலையத்தின் அன்றைய நிலவரங்கள், எப்ஐஆர் எண், சிஎஸ்ஆர் எண், யார் பொறுப்பு, பாரா யார் என்ற விவரங்கள் எழுதப்பட்டு வருகின்றன. அதோடு மட்டுமல்லாது தினந்தோறும் ஒரு திருக்குறள் எழுதப்பட்டு அதற்கு விளக்கமும் எழுதப்பட்டு வருகின்றனர். காவலர்கள்.

தினந்தோறும் பல்வேறு பணிகளுக்காக வருபவர்கள் இதை ஆர்வத்துடன் படித்து செல்கின்றர். காவல் பணிகளுக்கு மத்தியில் திருக்குறளை அனைவரும் பயில வேண்டும், தெரிந்துக் கொள்ள வேண்டும் என எழுதப்பட்டு வருவதை தமிழ் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளர்.

Related Stories: