கீழ்வேளூர், டிச.4: கீழ்வேளூர் அடுத்த தேவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் எயிட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஞானசேகர் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர்கள் மஞசுளா, ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் உதயசங்கர் வரவேற்றார். கருத்தரங்கில் சிறப்பு பேச்சாளர்கள் ஆசிரியர்கள் விஸ்வா, சதீஷ்குமார், செந்தில்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து எச்ஐவி விழிப்புணர்வு குறித்து மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, வினாடி, வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி சாரண ஆசிரியர் ரவிச்சந்திரன், சதிஷ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.