வேதாரண்யம், டிச.4: வேதாரண்யம் ஊராட்சிஒன்றியம் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனியநாதன், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது அவர் தெரிவித்ததாவது:
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம், தகட்டூர் ஊராட்சியில் உள்ள கல்யாணச்சேரி-மாவடி கொல்லைபகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு தார்சாலைஅமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். ரூ.7.5 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி மழைக்காலம் முடிவடைந்தவுடன் தொடங்கப்படும்.