உப்பூர் கோரையாறு கரையோரம் 20 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம்

முத்துப்பேட்டை, டிச.4: திருவாரூர்மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உப்பூர்பகுதியில் செல்லும் கோரையாற்றில் அதிகளவில் தண்ணீர்சென்று வருகிறது. இந்தநிலையில் கோபாலசமுத்திரம் அருகே கரையோரம் திடீரென்று சுமார்20அடி ஆழத்திற்கு உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டது. மேலும் இதனால் அப்பகுதி கரை உடைப்பு ஏற்பட்டும் சூழ்நிலை உருவானது. இதனையடுத்து அங்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொழிலாளர்களை கொண்டு மணல் மூட்டைகள் அதில் போட்டு நிரப்பி சரி செய்தனர். இதனால் சுற்றுபகுதி கிராமம் மற்றும் சாகுபடி வயல்கள் மூழ்கும் அபாயம் தவிர்க்கப்பட்டது.

Related Stories: