நீடாமங்கலம்,டிச.4: தினகரன் செய்தி எதிரொலியால் காமராஜர் காலனியில் தெருவில் சூழ்ந்துள்ள மழை நீரை மினி மோட்டார் உதவியுடன் அகற்றும் பணி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பேரூராட்சி காமராஜர்காலனி,காமாரஜர் நகர்,புதுத்தெரு,ஒரத்தூர் ,பொதக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள வீடுகளை மழை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் வெளியில் கூட வர முடியாத நிலையில் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர்.பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் சிறுவர்கள் தண்ணீரில் விளையாடிமகிழ்ந்தனர். நீடாமங்கலம் பேரூராட்சி காமராஜர் காலணியில் சரியான வடிகால் வசதி இல்லாதால் தெருக்களில் தண்ணீர் தேங்கியுள்ளதண்ணீரால் கொசு தொல்லை அதிகம் உள்ளது.இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என கடந்த 1ம் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது.