அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கைகால்கள் வழங்கல்

திருவாரூர், டிச.4: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் 6 பேருக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான செயற்கை கால்களை டீன் முத்துக்குமரன் வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி நேற்று திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வியல் துறை சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மாற்றுத்திறனாளிகள் 6 பேர்களுக்கு ரூ 3 லட்சம் மதிப்பில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் செயற்கை கால்களை டீன் முத்துக்குமரன் வழங்கினார். நிகழ்ச்சியில் மருத்துவர்கள் செல்வி, அன்சாரி, அருண்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: