புதுக்கோட்டை, டிச. 4: புதுக்கோட்டை அருகே ஆடு திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி அடுத்த புதுக்கோட்டை அருகேயுள்ள மறவன்மடம் மேல தெருவைச் சேர்ந்தவர் பூலோக பாண்டியன் (52). இவர் ஆடு மாடு மேய்க்கும் தொழிலாளியான இவர், கடந்த இருநாட்களுக்கு முன்னர் நான்கு வழிச்சாலை அருகே ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக கொண்டு சென்று கொண்டிருந்தார். இவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த கைலாசபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணனின் மகனும் கட்டிடத் தொழிலாளியுமான பாலமுருகன் (23), அதே பகுதியைச் சேர்ந்த பால்ராஜின் மகனும் லாரி டிரைவருமான ஜெகன் (25) ஆகிய இருவரும், பூலோகபாண்டியனின் ஆடுகளில் ஒன்றை திருடியதோடு ைபக்கில் கடத்தில் சென்றனர். பின்னர் இதுகுறித்து பூலோக பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த புதுக்கோட்டை எஸ்ஐ முத்துராஜா, இருவரையும் கைதுசெய்தார். மேலும் திருடுபோன ஆட்டை மீட்டதோடு திருட்டுக்கு பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்தார்.