திருவெண்ணெய்நல்லூர், டிச. 4: திருவெண்ணெய்நல்லூர் அருகே 5 மாத கர்ப்பிணி அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது கணவர், மாமியாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த ஆனத்தூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மகன் கணேஷ் பாபு(27). புதுவை வில்லியனூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் சூரியா(20)வை 3 வருடமாக காதலித்து திருமணம் செய்து ள்ளார். தற்போது அவர் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். மேலும் சூரியா திருமணத்திற்கு முன்பு நடிகர் சரத்குமார் வீட்டில் இரண்டு வருடமாக வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.