திருவண்ணாமலை, டிச.4: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 3ம் நாளான நேற்று, பூத வாகனத்தில் சந்திரசேகரரும், சிம்ம வாகனத்தில் அண்ணாமலையாரும் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவின், ஒவ்வொரு நாள் விழாவுக்கும் தனித்துவமிக்க பொருள் உண்டு. அதன்படி, மூவகை வினைகள், புத்திகள், குணங்கள், கூறுகள், பிறவிகள், பற்றுகள் ஆகியவை நீங்க வேண்டி நேற்று 3ம் நாள் உற்சவம் நடைபெற்றது.அதைெயாட்டி, அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூைஜகள், ஆராதனை, அபிஷேக வழிபாடுகள் நடந்தது. மேலும், கோயில் கருவறை எதிரில் அமைந்துள்ள பிரதோஷ மண்டபத்தில் 1,008 சங்காபிசேகம் நடந்தது.தொடர்ந்து, காலை 11.30 மணியளவில் ராஜகோபுரம் எதிரில் அமைந்துள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து மேளதாளம் முழங்க காலை உற்சவம் தொடங்கியது. வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், தங்க பூத வாகனத்தில் சந்திரசேகரரும் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.