பெரம்பலூர்,டிச.3: பெரம்ப லூர் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 99 அரசு பள்ளிகளுக்கு ரூ.35 லட்சம் மதிப்பில் எல்.இ.டி டிவி சமூக பங்களிப்பு திட்டத்தின்கீழ் நேற் று வழங்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பள்ளி மாணவர்கள் கண்டு பயன்பெற ஏதுவாக 51 அரசு, ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளிகள் மற் றும் 40மேல்நிலைப் பள்ளி கள் எனமொத்தம் 99பள்ளி ளுக்கு ரூ35 லட்சம் மதிப் பில் 43 இன்ச் அளவுள்ள எல்.இ.டி டிவிக்கள் நேற்று வழங்கப் பட்டன. பெரம்பலூர் மாவட்டம், விஜயகோபாலபுரத் தில் இயங்கிவரும் எம்.ஆர். எப்டயர் தொழிற்சாலை நிறுவனத்தின் சமூக பங்க ளிப்பு திட்டத்தின் கீழ் டிவிக்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் சாந்தா தலைமை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதிவாணன், , மாவட்டக் கல்வி அலுவலர்கள் மாரிமீனாள், குழந்தைராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.