பெரம்பலூர், டிச. 3: பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இந்நிலையில் நேற்று ஒன்றரை மணி நேரம் நடந்த குறைதீர் கூட்டத்தில் 111 கோரிக்கை மனுக்கள் குவிந்தன. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் முதல்கட்டமாக ஊரக பகுதிகளுக்கு நடத்தப்படுவதாக தமிழக தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தெரிவித்தார். இதன்படி 6ம் தேதி மனுதாக்கல் தொடங்கி 13ம் தேதி வரை நடக்கிறது. 16ம் தேதி மனுக்கள் பரிசீலனையும், 18ம் தேதி மனுக்கள் வாபசும் நடக்கிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு 27ம் தேதி நடக்கிறது. 2ம் கட்ட வாக்குப்பதிவு 30ம் தேதி, ஜனவரி 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. 4ம் தேதி தேர்தல் நடவடிக்கை முடிவு பெறுகிறது.