செய்யாறு அருகே சுவர் இடிந்து விழுந்து பெண் பலி

செய்யாறு, டிச. 1: செய்யாறு அடுத்த அழிவிடைதாங்கி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சாண்டி(40), விவசாயி. இவரது மனைவி லட்சுமி(37). இவர் தனது குடிசை வீட்டின் அருகே நேற்று முன்தினம் காலை சமையல் பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தாராம். அப்போது, மழையால் ஈரமாக இருந்த அவரது குடிசை வீட்டின் மண் சுவர் திடீரென சரிந்து லட்சுமி மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த லட்சுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு வெம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, பிச்சாண்டி நேற்று முன்தினம் பிரம்மதேசம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் எஸ்ஐ ஆசைத்தம்பி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: