செய்யாறு, டிச. 1: செய்யாறு அடுத்த அழிவிடைதாங்கி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சாண்டி(40), விவசாயி. இவரது மனைவி லட்சுமி(37). இவர் தனது குடிசை வீட்டின் அருகே நேற்று முன்தினம் காலை சமையல் பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தாராம். அப்போது, மழையால் ஈரமாக இருந்த அவரது குடிசை வீட்டின் மண் சுவர் திடீரென சரிந்து லட்சுமி மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த லட்சுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு வெம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.