வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள்

ஓமலூர், நவ.19: தாரமங்கலம் அருகேயுள்ள அமரகுந்தியில், வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது.  போட்டியில் வெற்றி பெற்ற அணிகள் மற்றும் வீரர்களுக்கு, நேரு யுவகேந்திரா சார்பில் கோப்பைகள் வழங்கப்பட்டது. தாரமங்கலம் ஒன்றியம் அமரகுந்தி கிராமத்தில், அமரகுந்தி காந்தி இளைஞர் நற்பணி மன்றம், சேலம் நேரு யுவகேந்திரா இணைந்து, வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்தியது. இதில், கால்பந்து, கைப்பந்து, இறகுபந்து, தடகளம், கோ-கோ உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது. போட்டிகளில் தாரமங்கலம் மற்றும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த சுமார் 35 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டிகளில் அமரகுந்தி அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றன. மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கும், தனித்தன்மையுடன் திறமைகளை வெளிப்படுத்திய வீரர், வீராங்கனைகளுக்கு, தனிநபர் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதற்கான பரிசளிப்பு விழாவில், சேலம் மாவட்ட நேரு யுவகேந்திரா இளைஞர் ஒருங்கிணைப்பாளர் ட்ரவீன் சார்லஸ்டன் கலந்துகொண்டு வீரர்களுக்கும் பதக்கம், கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். காந்தி நற்பணி மன்ற தலைவர் கார்த்திக், துணை தலைவர் சபரிராஜா, செயலாளர் விமல்குமார், அருண்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.

Related Stories: