கார்த்திகை பிறப்பை முன்னிட்டு ஐயப்பன் கோயிலில் படிபூஜை

சிங்கம்புணரி, நவ.19:  சிங்கம்புணரி ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு 18 படிகளுக்கும் படி பூஜை நடைபெற்றது. காலையில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். தொடர்ந்து  இரவு படி பூஜை விழாவில் படிகளின் இருபுறமும் குத்துவிளக்கேற்றி தேங்காய் உடைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மஞ்சள் மாத கணபதி ஐயப்பன் சுவாமிக்கு பால், மஞ்சள் உள்ளிட்ட 11 வகையான அபிசேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும் சிறப்பு யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. இதில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: