திருப்புத்தூர், நவ.19: திருப்புத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் ஐயப்பன் மற்றும் முருகன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக பகல் முழுவதும் நடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்புத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோயில் உள்ளது. கார்த்திகை மாதம் தொடங்கியுள்ளதை அடுத்து ஐயப்பன், முருகன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக கற்பக விநாயகர் கோவிலில் நேற்று முன்தினம் முதல் காலை 6 மணியிலிருந்து இரவு 8 மணிவரை நடை திறந்திருக்கும்.