தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணன்

இளையான்குடி, நவ.19:  இளையான்குடி அருகே கோட்டையூரை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன்கள் கனகராஜ்(45), கனகேந்திரன்(40). கடந்த சில தினங்களாக அண்ணன், தம்பி இடையே சொத்து பிரிப்பதில் தகராறு இருந்துள்ளது. பயிர் இன்சூரன்ஸ் பதிவு செய்துவரும் நிலையில் நேற்று கனகராஜ் மற்றும் கனகேந்திரன் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. அப்போது திடீரென  தம்பி கனகேந்திரனை, அண்ணன் கனகராஜ் அரிவாளால் வெட்டினார்.

இதில் பலத்த காயமடைந்த கனகேந்திரன் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கனகேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த இளையான்குடி போலீசார் கனகராஜை கைது செய்தனர்.

Related Stories: