சிவகங்கை, நவ.19: காரைக்குடி டி.டி.நகர் பகுதியில் வசிக்கும் குறவர் சமூகத்தினர் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் ஜெயகாந்தனிடம் அளித்த மனுவில், ‘‘காரைக்குடி டி.டி.நகர் சர்ச் 3 மற்றும் 4வது தெருவில் குறவர் சமூகத்தை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்டோர் வீடுகள் கட்டி 80 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்த வருகிறோம். நாங்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா மற்றும் மின் இணைப்பு வழங்க வேண்டும்.