கோவில்பட்டி, நவ.19: கோவில்பட்டி அரசு வட்டார நூலகத்தில் டைனமிக் அரிமா சங்கம் சார்பில் 52வது தேசிய நூலக வாரவிழா மற்றும் குழந்தைகள் தினவிழா நடந்தது. சங்க தலைவர் அரிமா பிரான்சிஸ் ரவி தலைமை வகித்தார். செயலாளர் ராமசாமி, நிர்வாக அதிகாரி சங்கரநாராயணன் முன்னிலை வகித்தனர். வட்டார நூலகர் அழகர்சாமி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பட்டைய தலைவரும் அரசு வழக்கறிஞருமான சந்திரசேகர் பேசினார். தொடர்ந்து 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என்ற தலைப்பிலும், 9 முதல் 12ம்வகுப்பு வரை வாசித்தால் வளரலாம் என்ற தலைப்பிலும் பேச்சு போட்டி நடந்தது. நடுவர்களாக நல்லாசிரியர் உலகநாதன், கருப்பசாமி, வக்கீல்ஜெயகிறிஸ்டோபர் ஆகியோர் செயல்பட்டனர்.