மெஞ்ஞானபுரம் அருகே வேன் கவிழ்ந்து 8 பேர் படுகாயம்

உடன்குடி, நவ. 19: வள்ளியூர் அருகே உள்ள இளையநயினார்குளத்தை சேர்ந்த சிலர், நேற்று காலை வேனில் திருச்செந்தூர் கோயிலுக்கு வந்தனர். அங்கு நேர்த்தி கடனாக முடி காணிக்கை செலுத்திவிட்டு மாலையில் ஊருக்கு புறப்பட்டனர். மெஞ்ஞானபுரம் அடுத்த நங்கைமொழி பகுதியில் வரும்போது சாலையின் குறுக்கே சைக்கிளில் சென்ற முதியவர் நிலை தடுமாறி உள்ளார். அவர் மீது மோதாமல் தடுக்க முயன்ற வேன் டிரைவர், பிரேக் போட்டுள்ளார்.   அப்போது சாலையின் குறுக்கே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் வேன் டிரைவர் பிரதீஷ் (26), சுபா (25), ஷீபா (24, சிவகாமி (39), சேர்மக்கனி (50), ஜெனிபர் (30), நல்லகுமார் (30), ராகுல் (7) ஆகியோர் படுகாயமடைந்தனர். அவ்வழியாக சென்றவர்கள், விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவவமனைக்கு அனுப்பி வைத்தனர். லேசான காயமடைந்தவர்களுக்கு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளித்தனர். விபத்து குறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: