சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் மதன் (38). தனியார் நிறுவன ஊழியர். செங்கல்பட்டை சேர்ந்தவர் சுமதி (34) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றனர். இதையடுத்து மதன், வண்ணாரப்பேட்டையில் தனியாக வசிக்கிறார். சுமதி, செங்கல்பட்டில், தனியாக டெய்லர் கடை நடத்துகிறார். இந்நிலையில், சுமதியின் மீது ஆத்திரத்தில் இருந்த மதன், அவரது புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து, இணையதளத்தில் வெளியிட்டார். மேலும், சுமதியின் செல்போன் நம்பர், முகவரி ஆகியவற்றையும் அதில் குறிப்பிட்டு இருந்தார்.