சென்னை: டைட்டன் கைக்கடிகார நிறுவனம் “நம்ம தமிழ்நாடு கலெக்சன்” என்ற பெயரில் புதிய கைக்கடிகார தொகுப்பை அறிமுகம் செய்துள்ளது. கலை நுணுக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கைக்கடிகாரங்கள் தமிழக கலாச்சார செழுமையை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. இந்த தொகுப்பு, டைட்டன் நிறுவன தலைமை வடிவமைப்பு அதிகாரி ரேவதி காந்த் மற்றும் பிரபல நாட்டிய கலைஞரும், திரைப்பட நடிகையுமான ஷோபனா சந்திரகுமார் பிள்ளை ஆகியோரால், சென்னையில் வெளியிடப்பட்டது. கோயில் கட்டிடக் கலை, காஞ்சிபுரம் பட்டு புடவைகளின் கலை நுணுக்கம், தனித்துவம் வாய்ந்த தமிழ் எழுத்துகள் இந்த புதிய கைக்கடிகாரத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.