அரியலூர்,நவ.14: திருமானூர் பகுதியில் கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதா? என அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அரியலூர் மாவட்டம், திருமானூர் பகுதிகளிலுள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் உள்ளதா என வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் பிளாஸ்டிக் கப், பாலித்தீன் பை, கேரி பேக் உள்ளிட்ட பொருள்களை பயன்படுத்த அரசு தடைவிதித்துள்ளது. எனினும் அரியலூர் மாவட்டம் முழுவதும் பொருள்கள் அதிகளவில் விற்பனை தொடர்ந்து பொதுமக்கள் பயன்பாடு குறையாமல் இருக்கிறது. இதனையடுத்து பள்ளி மாணவர்கள், துப்புரவு பணியாளர்கள் மூலம் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து வருகின்றனர்.