குழுமூரில் நாளை சிறப்பு குறைதீர் முகாம்

அரியலூர், நவ. 14: அரியலூர் வட்டம் குழுமூரில் சிறப்பு குறைதீர் முகாம் நாளை நடக்கிறது.அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் 8வது கட்டமாக சிறப்பு குறைதீர் முகாம் நாளை நடக்கிறது. அந்தந்த தாசில்தார்கள் தலைமை வகிக்கின்றனர். அதன்படி அரியலூர் வட்டத்தில் காமரசவல்லி, கடுகூர் ஆகிய கிராமங்களிலும், உடையார்பாளையம் வட்டத்தில் நாயகனைப்பிரியாள், பாப்பாக்குடி (தெ) ஆகிய கிராமங்களிலும், செந்துறை வட்டத்தில் குழுமூர் கிராமத்திலும், ஆண்டிமடம் வட்டத்தில் விளந்தை (வ) கிராமத்திலும் சிறப்பு குறைதீர் முகாம் நடக்கிறது. முகாமில் வருவாய்த்துறையின் சமூக பாதுகாப்பு திட்டங்கள், இலவச வீட்டுமனை பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும். எனவே இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அரியலூர் கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.

Related Stories: