தா.பழூர், நவ. 14: முத்துவாஞ்சேரி அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வழிந்தோடுகிறது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட முத்துவாஞ்சேரி கிராமத்தில் இருந்து அரியலூர் செல்லும் சாலையில் முத்துவாஞ்சேரி- குணமங்கலம் இடைபட்ட பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்துள்ளது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இந்த கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட தண்ணீர் முத்துவாஞ்சேரி அருகே பாலம் கட்டுவதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது பால வேலை முடிவடையும் தருணத்தில் இருப்பதால் விக்கிரமங்கலம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராம பகுதிகளுக்கு குடிநீருக்காக அனுப்பப்படும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திறக்கப்பட்டது.