திருவாரூர், நவ.14: 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் 3வது நாளாக நேற்று நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டதால் ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைக்காமல் பொது மக்கள் பாதிப்பிற்குள்ளாகினர். நியாயவிலை கடைகளுக்கு வழங்கப்படும் பொருட்களை எடை குறையாமல் கடை விற்பனையாளர்கள் முன்னிலையில் எடை வைத்து வழங்க வேண்டும், நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், மருத்துவப் படிப்பினை உயர்த்தி வழங்க வேண்டும், பணிவரன்முறை செய்யப்படாத ஊழியர்களை பணி வரன்முறை படுத்த வேண்டும், நியாய விலை கடைகளுக்கு என தனித்துறை உருவாக்க வேண்டும், பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும் மற்றும் 21 மாத ஊதிய நிழுவை தொகையினை உடனடியாக வழங்க வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலை கடை பணியாளர்கள் நீண்ட காலமாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.