மன்னார்குடி, நவ.14: கோட்டூர் வட்டார வளமையத்தில் ஒருங்கிணந்த பள்ளிக் கல்வி சார்பில் மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. ஒருங்கிணந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற் றோர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி கோட்டூர் வட்டார வளமையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுப்பிர மணியன் தலைமை வகித்தார். மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர் பயிற்சியை துவக்கி வைத்தார். மாவட்ட ஆவணப்படுத்துதல் ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். இதில், மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளி ஆயத்தப்பயிற்சி, ஆதார வள மையம் மற்றும் இல்லம் சார்ந்த பயிற்சி ஆகியவற்றின் மூலம் தொடர் பயிற்சி வழங்கி விரைவான முன்னேற்றம் அடைகிறார்கள் என்பதை பெற்றோர்களுக்கு உணர்த்தும் வகையிலலும், நன்கு முன்னேற்றம் அடைந்த குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் முன்னேற்றம் குறித்து எடுத்து கூறச் செய்வதன் மூலமும் அனைத்து பெற்றோர்களையும் ஊக்குவிக்கும் விதமாகவும் பயிற்சி வழங்கப்பட்டது.