சாத்தூர், நவ. 14: சாத்தூரில் விதிமீறிச் செல்லும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்படுகிறது என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூரில் உள்ள பிரதான சாலையில் பள்ளிகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், கோயில்கள், நீதிமன்றங்கள் ஆகியவை உள்ளன. இந்த சாலையில் ஏராளமான தீப்பெட்டி தொழிற்சாலை குடோன்கள் உள்ளன. இந்த குடோன்களிலிருந்து லாரிகள், சரக்கு வாகனங்கள் மூலம் தீப்பெட்டி பண்டல்களை வெளியூர்களுக்கும், வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.