வேட்டவலம், நவ.14: வேட்டவலம் அடுத்த செல்லங்குப்பம் ஊராட்சியில் ஜல்சக்தி அபியான் திட்டப் பணிகள் குறித்து, மத்திய அதிகாரி ரஜீப்குமார் சென் ஆய்வு செய்தார்.வேட்டவலம் அடுத்த செல்லங்குப்பம் ஊராட்சியில் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் ஏரியில் குடிமராமத்து பணிகள், மரக்கன்றுகளுக்கு சொட்டு நீர் பாசனம் செய்யும் பணி, சித்தேரி நீர்வரத்து கால்வாயில் சிமென்ட் தடுப்பணை அமைக்கும் பணி ஆகியவற்றை, மத்திய அரசின் ஆய்வு குழுவை சேர்ந்த முதன்மை அதிகாரி ரஜீப்குமார் சென் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.அப்போது அவர், நீர்வள ஆதாரங்களை மேம்படுத்துவது குறித்து அப்பகுதி விவசாயிகளிடம் ஆலோசனை நடத்தினார். மேலும், திட்டப் பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.